மௌரிய பேரரசு

மௌரிய பேரரசு பற்றிய சில தகவல்கள்:-
💠 தோற்றுவித்தவர் - சந்திர குப்த மௌரியர்
💠 சந்திர குப்த மௌரியர் அரியணை ஏறிய போது வயது - 25
💠 சந்திர குப்த மௌரியரை மௌரிய புத்ரா என்று அழைத்தவர்
- விசாகதத்தர்
💠 சந்திர குப்த மௌரியரின் அரசியல் குரு - சாணக்கியர்
💠 சாணக்கியர் வேறு பெயர்கள் - கௌடில்யர், விஷ்ணுகுத்தர், இந்தியாவின் மாக்கியவல்லி
💠 சந்திர குப்த மௌரியர் மனைவி - ஹெலன்
💠 ஹெலனின் தந்தை - செல்யூகஸ் நிகேடர்
💠 அலெக்சாண்டர் படைதளபதி - செல்யூகஸ் நிகேடர்
💠 செல்யூகஸ் நிகேடர் தூதர் - மெகஸ்தனிஸ்
💠 மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா
💠 சந்திரகுப்த மௌரியர் பின்பற்றிய சமயம் - சமண சமயம்
💠 சந்திரகுப்த மௌரியர் நினைவாக கட்டப்பட்டது - சந்திராபாஸ்டி
💠 சந்திரகுப்த மௌரியர் உடன் சென்றவர் - பத்ரபாகு
💠 சந்திரகுப்த மௌரியர் மகன் - பிந்துசாரர்
💠 பிந்துசாரர் பட்டப்பெயர் - அமித்ரகாதன்
💠 அமித்ரகாதன் என்பதன் பொருள் - எதிரிகளை அழிப்பவன்
💠 பிந்துசாரர் அவைக்கு வந்த சிரியா நாட்டு தூதர் - டைமக்கஸ்
💠 பிந்துசாரர் மகன்கள் - சுமனா, அசோகர்
💠 சுமனா ஆண்ட பகுதி - தட்டசீலம்
💠 அசோகர் ஆண்ட பகுதி - உஜ்ஜயினி
💠 முதல் தேசிய அரசர் - அசோகர்
💠 அசோகர் மனைவி - தேவி
💠 அசோகர் முதலில் வணங்கிய கடவுள் - சிவன்
💠 அசோகர் பிறகு பின்பற்றிய மதம் - புத்த மதம்
💠 அசோகர் மகன் - மகேந்திரன், மகள் - சங்கமித்திரை
💠 அசோகர் கூட்டிய புத்த மாநாடு - 3வது பாடலிபுத்திரம்
💠 அசோகர் பட்டப்பெயர் - தேவனாம் பிரியர், பிரியதர்சன்
💠 மௌரிய பேரரசின் கடைசி அரசர் - பிரகத்ரதன்
💠மௌரியர் கால ஆட்சி முறை பற்றி கூறும் - அஸ்தசாஸ்திரம்
💠 மௌரியர் கால ஆட்சி சிறப்பு பற்றி கூறும் நூல் - இண்டிகா
💠 விசாகதத்தர் இயற்றிய நூல் - முத்ராராட்சசம்
💠 முத்ராராட்சசம் எழுதப்பட்ட மொழி - வடமொழி
💠 முத்ராராட்சசம் எந்தவகையான நூல் - நாடக நூல்
💠 முத்ராராட்சசம் எந்தை பற்றி விவரிக்கிறது - நந்தர்களை முறியடித்து மௌரியர் ஆட்சி நிறுவியதை பற்றி
💠 அசோகரது கல்வெட்டை முதல்முதலில் படித்தறிந்தவர் - ஜேம்ஸ் பிரின்செப்
💠 வடமேற்கு இந்தியாவிலுள்ள அசோகரது கல்வெட்டுகள் எந்த மொழியில் பொறிக்கப்பட்டது - கரோஷ்தி
💠 அசோகரது கலிங்கப் போரைப் பற்றி கூறும் கல்வெட்டு - 13ம் பாறை கல்வெட்டு
💠 பேரரசின் தர்மத்தை பரப்புவதற்காக அசோகர் மேற்கண்ட முயற்சிகள் பற்றி கூறும் கல்வெட்டு - 7வது தூண்

 மௌரியர்கள் ஆட்சிமுறை :-
💠 மௌரியர்கள் ஆட்சி முறை பற்றி கூறும் நூல் - அஸ்தசாஸ்திரம்
💠 மௌரியர் காலத்தில் இருந்த அமைச்சரவை பெயர் - மந்திரி பரிஷத்
💠 மந்திரி பரிஷத்தில் இருந்தவர்கள் - புரோகிதர், மகாமந்திரி, சேனாபதி, யுவராஜன்
💠 அன்றாட அலுவல்களை நிறைவேற்ற அமாத்தியார்கள் என்றழைக்கப்பட்ட சிவில் பணியாளர்கள் இருந்தனர்.
💠 அமாத்தியர்களை தேர்வு செய்யும் முறை குறித்து கௌடில்யர் விவரமாக கூறியுள்ளார்.
💠 தர்மக் கோட்பாடுகளை பரப்புவதற்காக அசோகர் தர்மமகாமாத்திரர்களை நியமித்தார்.
💠 அனைத்து வகை வருவாய்களையும் வசூலிக்கும் துறையான வருவாய் துறை தலைவர் - சம்ஹர்த்தர்
💠 பொதுவாக விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது.
💠 மௌரிய பேரரசின் இராணுவத்துக்கு தலைவராக இருந்தவர் - சேனாபதி
💠 இராணுவத்தில் இருந்த பிரிவுகளுக்கு மேற்பார்வையாளர்கள் பெயர் - அத்யட்சகர்கள்
💠 வணிகம் மற்றும் தொழில்துறை சார்ந்த அலுவலர்கள் பெயர் - அத்யட்சகர்கள்
💠 உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்பட்டதை கௌடில்யர் விவரித்துள்ளார்.
💠 தலைநகரிலிருந்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எவ்வாறு அழைக்கப்பட்டார் - தர்மாதிகாரி
💠 மாகாணத் தலைநகரங்களிலும் மாவட்டங்களிலும் அமாத்தியர்கள் தலைமையிலான துணைநீதி மன்றங்கள் இருந்தன.
💠 மக்கள் தொகை கணக்கெடுப்பு தவறாமல் பின்பற்றப்பட்டது.
💠 பிராணிகளை கணக்கெடுப்பு செய்த முதல் அரசர் - அசோகர்
💠 மௌரிய பேரரசின் இருந்த மாகாணங்கள் - 4
💠 மாகாணங்கள் பெரும்பாலும் அரசு குடும்பத்தில் இருந்தே தேர்வு செய்து நியமிக்கப்பட்டனர்.
💠 ராஜீகர்கள் என்று அழைக்கப்பட்ட அதிகாரிகளின் கீழ் மாவட்ட நிர்வாகம் இருந்த்து.
💠 ராஜீகர்கள் கீழ் இருக்கும் உதவியாக இருக்கும் துணை அதிகாரிகள் பெயர் - யுக்தர்கள்
💠 கிராம நிர்வாகம் நடத்திய வர்கள் - கிராமணி
💠 பத்து அல்லது பதினைந்து கிராமங்களுக்கு உயர் அதிகாரியாக இருந்தவர் - கோபன்
💠 நகர மேற்பார்வையாளர் என்று அழைக்கப்பட்டார் - நகரிகா.
💠 மௌரியர் காலத்தில் பயன் படுத்தப்பட்ட நாணயம் - கர்ச பணம் (துளையிடப்பட்ட நாணயம்)

 சுங்க மரபு பற்றி சில தகவல்கள் :-
💠 சுங்க மரபு தோற்றுவித்தவர் - புஷ்ய மித்ர சுங்கர்
💠 புஷ்ய மித்ர சுங்கர் பின் பற்றிய சமயம் - இந்து சமயம்
💠 புஷ்ய மித்ர சுங்கர் ஆதரித்த சமயம் - வைதீக பிராமண சமயம்
💠 பிஷ்ய மித்ர சுங்கர் மேற்கொண்ட யாகம் - அசுவமேத யாகம்
💠 புஷ்ய மித்ர சுங்கர் காலத்தில் வாழ்ந்த இலக்கிய வல்லுநர் - பதஞ்சலி
💠  புஷ்ய மித்ர சுங்கர் மகன் - அக்னி மித்ரன்
💠  அக்னி மித்ரன் தலைவனாக கொண்டு இயற்றப்பட்ட நூல் - மாளவிகாக்கினி மித்ரம்
💠 மாளவிகாக்கினி மித்ரம் நூல் இயற்றியவர் - காளிதாசர்
💠 சுங்க வம்சத்தின் கடைசி அரசர் - தேவபூதி
💠 தேவபூதி மந்திரி பெயர் - வாசுதேவ கன்வா
💠 வாசுதேவ கன்வா வால் கொல்லப்பட்டவர் - தேவபூதி

 சாதவாகனரகள் பற்றிய சில தகவல்கள்:-
💠 சாதவாகனர் ஆண்ட பகுதி - கிருஷ்ணா கோதாவரி இடைப்பட்ட பகுதி
💠சாதவாகனர் மரபு தோற்றி வித்தவர் - சிமுகர்
💠 சிமுகர் அடுத்து ஆட்சிக்கு வந்தவர் - கிருஷ்ணர்
💠 கிருஷ்ணர் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் ஸ்ரீசதகர்ணி
💠 முதலாம் ஸ்ரீசதகர்ணி மாளவத்தை
வென்று மேற்கொண்ட யாகம் - அசுவமேத யாகம் (குதிரை வேள்வி)
💠 முதலாம் ஸ்ரீசதகர்ணி தலைநகர் - பிரதிட்டன்
💠 சாதவாகனர் பதினேழாவது அரசன் - ஹாலா
💠 ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த அரசர் - ஹாலா
💠 சத்தசாய் என்றழைக்கப்படும் கத சப்த சாய் என்ற நூலை இயற்றியவர் - ஹாலா
💠கத சப்த சாய் எழுதப்பட்ட மொழி - பிராகிருதம்
💠 சாதவாகனர்களின் மிக சிறந்த அரசர் - கௌதமிபுத்ர சதகர்ணி (கிபி.106 முதல் 130)
💠  கௌதமிபுத்ர சதகர்ணி சாகர்களை வெற்றி பெற்று கிடைத்த பட்டம் - சாகாரி
💠 கௌதமிபுத்ர சதகர்ணி அன்னை கௌதமி பாலஸ்ரீ வெளியிட்ட நாசிக் கல்வெட்டு இவரை பற்றி கூறுகிறது.
💠 கௌதமிபுத்ர சதகர்ணி பின் ஆட்சி செய்தவர் - விசிஸ்ட புத்ர புலமாயியக்ன சதகர்ணி
💠 விசிஸ்ட புத்ர புலமாயியக்ன சதகர்ணி நிர்மாணித்த நகரம் - நவங்கரா
💠 சாதவாகனர் கடைசி அரசர் - யக்ஞஸ்ரீ சதகர்ணி
💠 இவர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் பொறிக்கப்பட்ட சின்னம் - கப்பல்
💠 சாதவாகனர் ஆட்சி காலத்தில் புரதத்தில் இருந்த நாணயம் - கார்சபணம், சுவர்ணம்
💠 சாதவாகனர் ஆட்சி மொழி - பிராக்கிருதம்
💠 சாதவாகனர் ஆட்சி காலத்தில் இயற்றிய இலக்கிய நூல்கள் - சப்தசடாகா, பிருகத்கதா
💠 சாதவாகனர் ஆட்சி காலத்தில் இயற்றிய இலக்கண நூல் - கடாந்திரா
💠 சாதவாகனர் காலத்தில் அமைக்கப்பட்ட குகை ஓவியங்கள் அமைந்துள்ள இடம் - அமராவதி, நாகர்ஜூனா கொண்ட
💠 சாதவாகனர் காலத்தில் கிழக்கு கடற்கரையில் அமைந்த துறைமுகங்கள் - கண்டகசோலா, கஞ்சம்

 குஷாணர்கள் மரபு பற்றிய சில தகவல்கள்:-
💠 குஷாணர் வம்சத்தை தோற்றுவித்தவர் - குஜாலா காட்பீசசு
💠 குஷாணர் எந்த இனத்தை சார்ந்தவர் - யூச்சி
💠 குஜாலா காட்பீசசு மகன் - வீமா காட்பீசசு
💠 குஷணா வம்சத்தின் சிறந்த அரசர் - கனிஷ்கர்
💠 சக சபாத்தம் தோற்றுவித்தவர் - கனிஷ்கர்
💠 சக சகாப்தம் ஆண்டு - கி.பி.78
💠 கனிஷ்கர் பாமிர் முடிச்சை கடந்து சீனாவில் கைபற்றிய இடங்கள் - கோட்டான், யார்க்கண்டு, காஷ்கர்
💠 கனிஷ்கர் காலத்தில் புகழ்பெற்ற தத்துவ ஞானி - அசுவகோசர்
💠 இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்
💠 கனிஷ்கர் கூட்டிய புத்த சமய மாநாடு - 4 இடம் - குந்தல்வனம்
💠குந்தல்வனம் புத்த மாநாட்டில் கலந்து கொண்ட துறவிகள் - அசுவகோசர், வசுமித்திரர், நாகர்ஜூனர், பார்சவர்
💠 அசுவகோர் இயற்றிய நூல் - புத்தசரிதம்
💠 நாகர்ஜூனர் இயற்றிய நூல் - மத்திய மிக சூத்திரம்
💠 வசுமித்திரர் இயற்றிய நூல் - மகாவிபாஷம்
💠 நான்காவது புத்த சமய மாநாட்டில் புத்த மதம் எவ்வாறு பிரிந்தது - 2 இரண்டாக
💠 மகாயான புத்த மாதத்தில் சிறந்த அறிஞர்கள் - நாகர்ஜூனர், அசுவகோசர்
💠 கனிஷ்கர் காலத்தில் வாழ்ந்த மருத்துவர் - சரகர்
💠 சரகர் இயற்றிய நூல் - சரக சமிதம்
💠 கனிஷ்கர் காலத்தில் வாழ்ந்த சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் - சுசுருதர்
💠 சுசுருதர் இயற்றிய ஊ - சுசுருத சமிதம்
💠 கனிஷ்கர் காலத்தில் கட்டிடக் கலை முறை - காந்தார கலை

 வர்த்தமான மரபு பற்றிய சில தகவல்கள்:-
💠 வர்த்தமான மரபு தோற்றுவித்தவர் - பிரபாகர வர்த்தனர்
💠 பிரபாகர வர்த்தனர் மகனகள் - 2 மகள் - 1
1. இராஜ்ஜிய வர்த்தனர்
2. ஹர்ச வர்த்தனர்
3. இராஜ்யஸ்ரீ
💠 வர்த்தமானர்களின் தலைநகர் - தானேசுவரம்
💠 ஹர்சர் தானேசுவரத்தின் பதவி ஏற்ற ஆண்டு - கி.பி. 606
💠 ஹர்சரை தோற்கடித்த சாளுக்கிய மன்னர் - இரண்டாம் புலிகேசி
💠 ஹர்சர் தன் தலைநகர் தானேசுவரத்தில் இருந்து கன்னோசிக்கு மாற்றினார்
💠 ஹர்சர் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பிரயாகை கூட்டம் நடத்தினார்
💠 ஹர்சர் காலத்தில் இந்திய வந்த சீனா பயணி - யுவான் சுவாங்
💠 யுவான் சுவாங் இயற்றிய நூல் - சியூக்கி
💠 கன்னோசி புத்த சமய மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் - யுவான் சுவாங்
💠 ஹார்சர் காலத்தில் நாலந்தா பல்கலைக்கழக துணை வேந்தர் - தர்ம்பாலர்
💠ஹர்சர் எழுதிய மூன்று நூல்
1. நாகனந்தா
2. இரத்தினாவலி
3. பிரியதர்சிகன்
💠 ஹர்சர் அரசவையில் உள்ள தலைமை அறிஞர் - பானர்
💠 பானர் இயற்றிய நூல் - ஹர்ச சரிதம், காதம்பரி
💠 ஹர்சர் ஆதரித்த அறிஞர்கள் - ஹரித்தர், ஜெயசந்தர்

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

புலவர்கள் அவர்களின் உவமை பெயர்கள்